யாழ்.மாவட்டத்தில் 17 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 31 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவற்றின் அடிப்படையில்,
யாழ்.மாவட்டத்தில் 17 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 09 பேர்,
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
பலாலி விமானப்படை முகாமில் ஒருவர்,
வவுனியா மாவட்டத்தில் 07 பேர்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர்,
மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
கிளிநொச்சி மாட்டத்தில் 05 பேர்
இரணைமடு விமானப்படை முகாமில் 04 பேர்,
மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்